டி.என்.பாளையம் அருகே குடும்பத்தகராறில் மாமனார், மைத்துனரை கத்தியால் குத்தியவர் சிறையில் அடைப்பு
- டி.என்.பாளையம் அருகே குடும்பத்தகராறில் மாமனார், மைத்துனரை கத்தியால் குத்தியவரை சிறையில் அடைத்தனர்
- இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்,
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் தமிழக்கொடிக்கும் டி.என்.பாளையத்தை சேர்ந்த பெரியவன் என்பவரது மகன் வெற்றிவேல் (வயது 40) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தாரணி (9) என்ற மகளும், சித்தார்த் (8) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தமிழ்க்கொடி கணவனை பிரிந்து குழந்தை களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19-ந்தேதி தமிழ்க்கொடியின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற வெற்றிவேல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதை ரங்கசாமி மற்றும் அவரது மகன் சந்தோஷ் (36) தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வெற்றி வேல் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ரங்கசாமி யை குத்தி உள்ளார். இதை தடுக்க வந்த சந்தோஷையும் வெற்றி வேல் குத்தி உள்ளார். இதில் காயமடைந்த ரங்கசாமி மற்றும் சந்தோசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சத்தி யமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக அனுமதி த்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து வெற்றி வேலை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.