உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1142 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-05-12 09:31 GMT   |   Update On 2023-05-12 09:31 GMT
  • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
  • அணைக்கு வினாடிக்கு 1142 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.47 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1142 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 955 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.50 அடியாக உள்ளது.

30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.21 அடியாக உள்ளது.

33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.49 அடியாக உள்ளது.

Tags:    

Similar News