உள்ளூர் செய்திகள்

மலைப்பகுதியில் காட்டுத்தீ

Published On 2023-04-17 12:18 IST   |   Update On 2023-04-17 12:18:00 IST
  • யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
  • மலையின் மேல் மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் காட்டுத்தீ ஏற்பட்டது.

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

கடந்த ஒரு மாதமாக மழை இல்லாத காரணத்தினால் வனப்பகு திக்குள் மிகுந்த வறட்சி காணப்படுகின்றது.

இதனால் நேற்று மாலை சத்தியமங்கலம் வனச்சர கத்திற்குட்பட்ட கம்பத்தி ராயகிரி எனும் வனப்பகு தியில் மலையின் மேல் மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் காட்டுத்தீ ஏற்பட்டது.

காட்டுத் தீயானது மள மளவென பரவி சுமார் 20 ஏக்கர் மரங்கள் கருகி நாசமாகின.

இதில் பல அரிய வகை மூலிகை மரங்கள் மற்றும் பில் வகைகள் உள்ளது.

வனப் பாதுகாவலர் மற்றும் வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News