உள்ளூர் செய்திகள்

டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

Published On 2023-03-10 10:04 GMT   |   Update On 2023-03-10 10:04 GMT
  • ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார்.
  • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

ஈரோடு:

தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மற்றும் கூட்டங்களை முடித்து கொண்டு திடீரென நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஈரோடு வந்தார்.

அப்போது அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதில் காவல் நிலைய பதிவேடுகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்றும், போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பதிவேடுகளை முறையாக பராமரித்து வருவதையும், போலீஸ் நிலையத்தின் செயல்பாடு குறித்தும் பாராட்டி வெகுமதியளித்தார்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

Tags:    

Similar News