உள்ளூர் செய்திகள்

கார் மோதி கோர்ட்டு குமஸ்தா பலி

Published On 2022-12-28 09:47 GMT   |   Update On 2022-12-28 09:47 GMT
  • கிருஷ்ணமூர்த்தி தனது மகனை கல்லூரிக்கு அனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
  • அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 52). இவர் கோவை கோர்ட்டில் குமஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கவுரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது மகனை கல்லூரிக்கு அனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் பு.புளியம்பட்டி சத்திய மங்கலம் மெயின் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் கிருஷ்ண மூர்த்தி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இது பற்றி தகவல் கிடை த்ததும் பு.புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

Tags:    

Similar News