உள்ளூர் செய்திகள்

வெப்பிலி விற்பனைக்கூடத்தில் ரூ.34 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

Published On 2023-02-08 09:35 GMT   |   Update On 2023-02-08 09:35 GMT
  • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
  • 1,253 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.34 ஆயிரத்து 717 ரூபாய்க்கு விற்பனையானது.

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,759 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 24 காசுக்கும், அதிகபட்ச விலையாக 29 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 28 ரூபாய் 1 காசுக்கும் ஏலம் போனது.

மொத்தம் 1,253 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.34 ஆயிரத்து 717 ரூபாய்க்கு விற்பனையானது.

Tags:    

Similar News