உள்ளூர் செய்திகள்

ரூ.28 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

Published On 2023-05-24 09:44 GMT   |   Update On 2023-05-24 09:44 GMT
  • விவசாயிகள் 2 ஆயிரத்து 668 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
  • மொத்தம் ரூ.28 ஆயிரத்து 481-க்கு ஏலம் போனது.

சென்னிமலை:

சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 668 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.21.05-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.77-க்கும் என மொத்தம் ரூ.28 ஆயிரத்து 481-க்கு ஏலம் போனது.

இதேபோல் மொடக்குறிச்சி, வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.36 லட்சத்து 89 ஆயிரத்து 147-க்கு ஏலம் போனது.

Tags:    

Similar News