உள்ளூர் செய்திகள்
வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- மொத்த தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் விவசாயிகள் 10,702 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்த பட்சமாக 28 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 32 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் போனது. நேற்றைய சராசரி விலையாக 31 ரூபாய் 41 காசு என நிர்ணயம் செய்யப்பட்டது.
மொத்தம் 3523 கிலோ எடையுள்ள தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக விற்பனை கூடத்து நிர்வாகி தெரிவித்துள்ளார்.