உள்ளூர் செய்திகள்
வெப்பிலி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
- விவசாயிகள் 4,364 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- ரூ.48 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,364 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 7 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 75 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 77 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 2,001 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.48 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.