உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் `திடீர்' சாலை மறியல்

Published On 2023-02-16 14:48 IST   |   Update On 2023-02-16 14:48:00 IST
  • பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
  • போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டன் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் 370 வீடுகள் உள்ளது.

இந்த குடியிருப்புக்கு அருகே 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புறம்போக்கு நிலத்தில் 46 புதூர் ஊராட்சியை சேர்ந்த பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை சேமித்து பிரித்தெடுக்கும் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை கொட்டி எரித்து வருவதாகவும், அதிலிருந்து வெளியேறும் புகையானது இந்த பகுதி முழுவதும் உள்ள குடியிருப்புகளுக்குள் பரவி பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு ள்ளாக்கி வருவதாக பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இங்கு எரியும் குப்பையில் இருந்து வெளியேறும் புகையால் மூச்சு திணறல், திடீரென மயக்கம் அடைதல், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு பல்வேறு உடல் நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வலியுறுத்தி முத்துகவுண்டன் பாளையம் ரிங்ரோட்டில் திடீரென திரண்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஈரோடு - முத்தூர் பிரதான மற்றும் திண்டல் கொக்கராயன் பேட்டை ரிங் ரோட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News