செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் விழா
- ழுக்குளி செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது.
- நாளை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ரத உற்சவம் நடைபெற உள்ளது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அழுக்குளி செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 30-ந் தேதி காலை 6 மணிக்கு நந்தா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் கடந்த 3-ந் தேதி காலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், கிராம சாந்தியும் நடந்தது. 4-ந் தேதி கொடியேற்று விழாவும், இரவு அம்மை அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் திருவிழா இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி செந்தில்குமார் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.
தொடர்ந்து நாளை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ரத உற்சவம் நடைபெற உள்ளது. 7-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், பரிவேட்டையும், தெப்பத்தேர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
8-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவம், ஸ்ரீ அம்மன் சிறப்பு தரிசனம், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.