உள்ளூர் செய்திகள் (District)

அந்தியூர் பகுதிகளில் நாணல் தட்டு விலை குறைவு-வியாபாரி கவலை

Published On 2023-07-28 09:40 GMT   |   Update On 2023-07-28 09:40 GMT
  • நாணல் தட்டுகளை பறித்து வந்து விற்பனை செய்து வருவார்.
  • தற்போது 500 ரூபாய்க்கு குறைவாகவே விலை போகின்றது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதி பகுதியைச் சேர்ந்தவர் பூசாரி காளியப்பன் (வயது 52). கூலித் தொழிலாளியன இவர் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் முளைத்திருக்கும் நாணல் தட்டுகளை பறித்து வந்து விற்பனை செய்து வருவார்.

இந்த நாணல் தட்டுகள் கட்டைப்பை தயாரிக்கவும், தக்காளி நாற்றுகள் சாயாமல் இருப்பதற்கும், வெற்றிலை கொடி தலைவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. 200 குச்சிகள் கொண்ட ஒரு கட்டின் விலை கடந்த சில வாரங்களுக்கு முன் 700 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

தற்போது 500 ரூபாய்க்கு குறைவாகவே விலை போகின்றது.

மேலும் இதுகுறித்து கூளித்தொழிலாளியான பூசாரி காளியப்பன் கூறுகையில்,

நாணல் தட்டுகளை ஓடைகளில் பறிக்கும் ேபாது அந்த பகுதிகளில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகளவில் இருக்கும்.

அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரிய கட்டுகளாக கட்டி தலையில் சுமந்தபடி அங்கிருந்து கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றோம். தற்போது கிடைக்கும் இந்த விலை உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை.

மேலும் வாரத்தில் 3 அல்லது 4 நான்கு கட்டுகள் மட்டுமே விற்பதால் போதிய வருமானம் கிடைக்கவில்லை என வேதனையுடன் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News