உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

Published On 2023-01-06 16:07 IST   |   Update On 2023-01-06 16:07:00 IST
  • பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனி யார் டெக்ஸ்டைல் நிறு வனத்திற்கு வெடிகுண்டு வைக்க போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது
  • சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வாடகை தாரர்களை காலி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது

பெருந்துறை,

பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் செல்லா ண்டி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 3 பெட்ரோல் பங்குகளும், ஒரு தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செல்லா ண்டி அம்மன் கோவில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணனுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது.

பெயர் விலாசம் இல்லாத அந்த கடிதத்தில் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனி யார் டெக்ஸ்டைல் நிறு வனத்திற்கு வெடிகுண்டு வைக்க போவதாகவும், இதனால் அந்த நிறுவன த்தின் அருகில் இருக்கும் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வரும் 3 பெட்ரோல் பங்கு கள் மற்றும் தனியார் பள்ளி பாதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வாடகை தாரர்களை காலி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக இது தொட ர்பாக கோவில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News