உள்ளூர் செய்திகள்
சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்துள்ளது
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கதக்க ஒரு ஆண் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே அவரை டவுண் குரூப் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ராஜசேகர் (வயது 39) என்பவர் ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத ஆண் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.