உள்ளூர் செய்திகள்

103 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை

Published On 2022-11-03 09:25 GMT   |   Update On 2022-11-03 09:25 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.48 அடியாக உயர்ந்துள்ளது.
  • அணைக்கு வினாடிக்கு 2,849 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,849 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.48 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 103 அடியை நெருங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் பெரும்பள்ளம், வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம் ஆகிய அணைகள் தொடர்ந்து தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. 

Tags:    

Similar News