உள்ளூர் செய்திகள்

கொடிவேரி அணையில் குளிக்க மீண்டும் அனுமதி

Published On 2022-11-30 09:46 GMT   |   Update On 2022-11-30 09:46 GMT
  • மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்தது.
  • இன்று முதல் வழக்கம் போல் கொடி வேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கோபி:

கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை, கரூர் மற்றும் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்கிறார்கள்.

இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் கோபி செட்டிபாளை யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதையொட்டி பவானி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. மேலும் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு சென்றது.

இதனால் கடந்த 2 நாட்களாக கொவேரி தடுப்பணையில் குளிப்ப தற்கும், ரசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அணைக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்தது. அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கொடிவேரி தடுப்பணையிலும் தண்ணீர் குறைந்தது. இதனால் 2 நாட்களுக்கு பிறகு இன்று முதல் வழக்கம் போல் கொடி வேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி இன்று காலை குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News