உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையை வனத்துறையினர் மற்றும் டாக்டர்கள் பார்வையிட்டனர்.

குட்டியுடன் இறந்து கிடந்த பெண் யானை உடல் பிரேத பரிசோதனை

Published On 2023-03-26 07:37 GMT   |   Update On 2023-03-26 07:37 GMT
  • கால்நடை மருத்துவர்கள் யானைகளை பிரேத பரிசோதனை செய்தனர்.
  • அந்தியூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர், தாளக்கரை, தட்டக்கரை வனப்பகுதிகளில் யானை கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து சென்று கண்கா ணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்தியூர் வன சரகத்திற்கு உட்பட்ட தாளகரை ரோட்டில் உள்ள தென் பர்கூர் காப்புக்காடு மாரியணை சரகம் பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டி ருந்தனர்.

அப்போது அந்த பகுதி யில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட வனப் பணியாளர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது துர்நாற்றம் வீசிய இடத்தில் ஒரு பெண் யானை மற்றும் ஒரு குட்டி யானை என 2 யானைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அந்தியூர் வன சரகர் உத்தரசாமிக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனசரகர் உத்திரசாமி இறந்த யானைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து 2 யானைகளை யும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் சதாசிவம், கார்த்திக் மற்றும் பரத் ஆகியோர் நேரில் வந்து யானைகளை பிரேத பரிசோதனை செய்தனர்.

இதையடுத்து, யானைகளின் உடல்கள் மற்ற விலங்குகளின் உணவு க்காக அங்கேயே போடப்ப ட்டது. வனப்பகுதியில் குட்டியு டன் யானை எப்படி இறந்த து என்பது குறித்து அந்தியூர் வனத்து றையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News