உள்ளூர் செய்திகள்

கார் பள்ளத்தில் கவிழ்ந்து வேளாண்மைத்துறை ஊழியர் பலி

Published On 2022-10-07 07:12 GMT   |   Update On 2022-10-07 07:12 GMT
  • சித்தோடு அருகே உள்ள கருப்புராயன் கோவில் அருகில் இருந்த சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
  • விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

பவானி:

ஈரோடு சம்பத் நகர் அருணாச்சலம் வீதி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (35). இவர் வேளாண்மைத்துறையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் காரில் நசியனூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்பொழுது திடீரென கார் சித்தோடு அருகே உள்ள கருப்புராயன் கோவில் அருகில் இருந்த சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கார் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

சம்பவ இடத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் இடிப்பாடிகளில் சிக்கி இறந்த ஜெயக்குமார் உடலை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News