உள்ளூர் செய்திகள்

விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதி விபத்து

Published On 2023-03-29 10:04 GMT   |   Update On 2023-03-29 10:04 GMT
  • லாரி திரும்பும் போது பள்ளி பஸ் மீது மோதியது.
  • இதில் பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வாய்க்கால்மேடு இச்சிசெட்டிபாளையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராஜா என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது தேவம்பா ளையம் என்ற இடத்தில் தனியார் பள்ளி பஸ் வந்து கொண்டிருந்த போது எதிரே டிப்பர் லாரி ஒன்று கல் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த லாரி திரும்பும் போது பள்ளி பஸ் மீது மோதியது.

அப்போது லாரியில் இருந்து கற்கள் பள்ளி பஸ் மீது விழுந்தது. இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து. இதில் பள்ளி பஸ்சில் இருந்த குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.

இதனையடுத்து பஸ் மீது மோதிய டிப்பர் லாரி நிற்காமல் சென்றது. பஸ் டிரைவர் லாரியை துரத்தினார். அப்பவும் லாரி நிற்காமல் சென்றது.

இது குறித்து மலையம்பா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவயிடத்திற்கு நேரில் வந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அங்கே உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News