உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் சாவு

Published On 2022-09-13 10:10 GMT   |   Update On 2022-09-13 10:10 GMT
  • சாவடிபாளையத்துக்கு செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோட்டில் இருந்து சாவடிபாளையத்துக்கு செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News