உள்ளூர் செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

Published On 2023-10-14 07:56 GMT   |   Update On 2023-10-14 07:56 GMT
  • வாலிபர் லாரியில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
  • அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது.

அந்தியூர்:

அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதினாலும், திம்பம் மலைப்பாதை வழியாக செல்வதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாலும் இந்த வழித்தடத்தை வாகன ஓட்டிகள் அதிக அளவில் தற்போது பயன்படுத்தி வருகின்றார்கள்.

இந்த நிலையில் மைசூரில் இருந்து அந்தியூர் வழியாக ஈரோட்டிற்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி தாமரைக்கரை அருகே செட்டிநொடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ேமாட்டார் சைக்கிளில் வந்த வெள்ளிமலை பகுதியை சேர்ந்த வாலிபர் லாரியில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் இதுகுறித்து பர்கூர் மலைவாழ் மக்கள் கூறுகையில்,

அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது. மேலும் சாலைகள் சரிவர அந்த பகுதியில் போடப்ப டாததே இதற்கு காரணம் என்றும், குண்டும், குழியுமாக இருக்கும் சூழலை ஏற்பட்டிருப்பதனால் லாரி டிரைவர்கள் அந்த குழிகளில் விடாமல் வேறு பகுதிக்கு வாகனத்தை இயக்க வே ண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை ஏற்பட்டு எதிரே வரும் வாகனத்தின் மீது மோதும் நிலை ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

இதனை நெடுஞ்சாலைத் துறை உடனடியாக பார்வையிட்டு அதனை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News