உள்ளூர் செய்திகள்

லாரி மீது கார் மோதி வாலிபர் பலி

Published On 2022-07-22 10:08 GMT   |   Update On 2022-07-22 10:08 GMT
  • பெருந்துறை சிப்காட் அருகே கார் வந்து கொண்டு இருந்த போது அங்கு ரோட்டோரம் நின்று இருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதியது.
  • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

பெருந்துறை சிப்காட்டில் இருந்து பிஸ்கெட்டுகள் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு ஒரு லாரி சென்றது. அப்போது டிைர வர் வினாயக மூர்த்தி (49) லாரியை சிப்காட் அருகே ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.

அப்போது பெருந்துறை-கோவை ரோட்டில் மோட்டார் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கும், பெருந்துறை பாண்டியன் நகரை சேர்ந்த நந்தகுமார் (28), நசியனூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (29), புங்கம்பாடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (34), ஈரோடு, சம்பத் நகரை சேர்ந்த மணிவண்ணன் (27) ஆகிய 4 பேர் கோவை செல்வதற்காக ஒரு காரில் வந்தனர்.

காரை நந்தகுமார் ஓட்டினார். அப்போது அந்த கார் பெருந்துறை சிப்காட் அருகே வந்து கொண்டு இருந்த போது அங்கு ரோட்டோரம் நின்று இருந்த லாரியின் பினபுரம் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். மேலும் கார்த்திகேயன், சுரேஷ்குமார், மணி வண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News