உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 31.62 சதவீதம் பேர் தேர்ச்சி

Published On 2022-09-13 15:31 IST   |   Update On 2022-09-13 15:31:00 IST
  • ஈரோடு மாவட்டத்தில் 5 கல்வி மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படித்த 623 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வினை எழுதினர்.
  • இதில் 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 149 பேர் முதல் முறையாகவும், 48 பேர் 2-வது முறை யாகவும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ள்ளனர். தேர்ச்சி சதவீதம் 31.62 என கணக்கிடப்ப ட்டுள்ளது.

ஈரோடு:

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படி ப்பான பொது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்) போன்ற மருத்துவ படிப்பு களில் சேருவதற்கான நீட் என்ற நுழைவுத்தேர்வு மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டி ற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 12, 840 பேர் தேர்வு எழுதியதில் 4,447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு வெளியானது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை என 5 கல்வி மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படித்த 623 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வினை எழுதினர்.

இதில் 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 149 பேர் முதல் முறையாகவும், 48 பேர் 2-வது முறை யாகவும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ள்ளனர். தேர்ச்சி சதவீதம் 31.62 என கணக்கிடப்ப ட்டுள்ளது.

அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 41 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி 16 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் ஒருவரும், 400-க்கு மேல் இருவர், 300-க்கும் மேல் 5 பேர், 200-க்கும் மேல் 26 பேர், 100-க்கு மேல் 138 பேர், 93-க்கும் மேல் 25 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News