உள்ளூர் செய்திகள்

போலி லாட்டரி விற்ற 3 பேர் கைது

Published On 2022-11-04 09:55 GMT   |   Update On 2022-11-04 09:55 GMT
  • கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுப்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி (54), பச்சைமலை அடிவாரத்தை சேர்ந்த ரத்தினசபாபதி (56) ஆகிய 2 பேரும் வெள்ளைத் தாளில் எண்கள் எழுதி பொதுமக்களை ஏமாற்றும் வகையில் போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோல் அரச்சலூர் அருகே உள்ள தலவுமலை 4 ரோடு பகுதியில் போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த அட்டவணை அனுமன் பள்ளி பகுதியை சேர்ந்த லோகநாதன் (26) என்பவரை அரச்சலூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து ரூ.5,410 மதிப்பிலான தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகளும் 

Tags:    

Similar News