உள்ளூர் செய்திகள்

மினி வேன்-இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி

Published On 2023-04-18 09:39 GMT   |   Update On 2023-04-18 09:39 GMT
  • மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
  • 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி ஊசிமலை கிராமத்தை சேர்ந்தவர் சித்தலிங்கம் (19). கூலி தொழிலாளியான இவர் பர்கூரில் இருந்து அந்தியூரக்கு வந்தார்.

இதையடுத்து அவர் மீண்டும் சொந்த ஊரான ஊசிமலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தாமரைக்கரை என்ற இடத்தில் ஊசிமலை கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் (52) என்ப வர் சித்தலிங்கம் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறினார். இதையடுத்து அவர்கள் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

தொடர்ந்து அவர்கள் இருவரும் பர்கூர் அருகே ஆலமரத்து வளைவு என்ற இடத்தில் இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

அந்த வழியாக எதிரே ஒரு மினி லாரி வந்தது. அப்போது எதிர்பா ராத விதமாக மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில் இரு சக்கர வாக னத்தில் வந்த சித்தலிங்கம் மற்றும் சின்னப்பையன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் சித்தலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நிலை யில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சின்ன பையனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்கி ருந்தவர்கள் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News