உள்ளூர் செய்திகள்

1,930 மெட்ரிக் டன் யூரியா ஈரோட்டுக்கு வருகை

Published On 2022-09-21 10:09 GMT   |   Update On 2022-09-21 10:09 GMT
  • தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலமாக 1,930 டன் யூரியா ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.
  • இதில் ஈரோடு மாவட்டத்துக்கு 1,680 மெட்ரிக் டன் யூரியாவும், திருப்பூர் மாவட்டத்துக்கு 250 மெட்ரிக் டன் யூரியாவும் அனுப்பி வைக்கப்பட்டன.

ஈரோடு:

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலமாக 21 பெட்டிகளில் 1,930 டன் யூரியா இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து அவற்றை ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களுக்கு லாரிகள் மூலமாக அனுப்பும் பணி மண்டல மேலாளர் ஸ்ரீதர் மற்றும் கிரிப்கோ கள அலுவலர் கதிர் வடிவேலன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

இதில் ஈரோடு மாவட்டத்துக்கு 1,680 மெட்ரிக் டன் யூரியாவும், திருப்பூர் மாவட்டத்துக்கு 250 மெட்ரிக் டன் யூரியாவும் அனுப்பி வைக்கப்பட்டன.

Tags:    

Similar News