உள்ளூர் செய்திகள்
இடைத்தேர்தலையொட்டி வாகன சோதனை- வியாபாரியிடம் ரூ.62 ஆயிரம் பறிமுதல்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி செங்கோடம்பள்ளம் பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி செங்கோடம்பள்ளம் பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது, அந்த சரக்குவேனில் செங்கோடம்பள்ளம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்ற வியாபாரி உரிய ஆவணம் இல்லாமல் ரூ.62 ஆயிரத்து 600 வைத்திருந்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.