உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வேடசந்தூர் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

Published On 2022-07-31 05:44 GMT   |   Update On 2022-07-31 05:44 GMT
  • மத்திய அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியில் நடந்தது.
  • 357 மாற்றுத்திறனாளிகளுக்கு பைக், 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வேடசந்தூர்:

மத்திய அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியில் நடந்தது. விழாவுக்கு காந்திராஜன் எம். எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு தலைவர்கள் சவுடேஸ்வரி கோவிந்தன், சீனிவாசன், வேடசந்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கவிதா பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஜோதிமணி எம்.பி. கலந்து கொண்டு 357 மாற்றுத்திறனாளிகளுக்கு பைக், 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது, அரிசி, பால், தயிர், கோதுமை உள்ளிட்ட பொருள்களுக்கு 5% ஜி.எஸ்.டி. வரி விதித்ததை கண்டித்து நாடாளுமன்றத்தில் பிளாக் கார்டு படித்து பேசியதற்கு 2 வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டேன் என்றார்.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் வரவேற்றார். தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர்கள் கோபால்சாமி, தருமர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News