உள்ளூர் செய்திகள்

கோவிந்தபேரி ஊராட்சியில் விவசாயிகளுக்கு உபகரணங்கள்

Published On 2023-11-20 08:51 GMT   |   Update On 2023-11-20 08:51 GMT
  • வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் அணி தலைவர் விசுவராஜ் விவசாயிகளுக்கு வெங்காயம், சிறுகிழங்கு சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளித்தார்.
  • ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் விவசாயிகளுக்கு சட்டி, மம்பட்டி, களவெட்டி வழங்கினார்.

கடையம்:

கடையம் யூனியனுக்கு உட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில், திட்டத்தின் அணி தலைவர் விசுவராஜ் கலந்து கொண்டு 90 விவசாயிகளுக்கு வெங்காயம், சிறுகிழங்கு சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளித்தார். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் விவசாயிகளுக்கு உபகரணங்களான சட்டி, மம்பட்டி, களவெட்டி போன்றவற்றை வழங்கினார். இதில் துணைத்தலைவர் இசேந்தரன், 5-வது வார்டு உறுப்பினர் ராஜா, 4-வது வார்டு உறுப்பினர் சுகிதா மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News