உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம் நடைபெற்றது.

அரசு கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

Published On 2022-10-14 13:47 IST   |   Update On 2022-10-14 13:47:00 IST
  • எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள்.
  • விழாவில் 296 மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சீர்காழி:

கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு குறித்து ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு மையம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

வணிகவியல் துறை தலைவர் திருநாராயணசாமி வரவேற்றார்.

கருத்தரங்கில் சிதம்ப ரம் அண்ணாமலை பல்கலை க்கழக தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் அதன் திட்டங்களையும், எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன விதிமுறை களை எல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கருத்துக்களை வழங்கினார்.

இதில் பல்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்களும், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் 296 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தமிழ் துறை தலைவர் அனுசியா தொகுத்து வழங்கினார்.

கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் குமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் செய்திருந்தனர்.

Tags:    

Similar News