உள்ளூர் செய்திகள்
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.27.64 லட்சம் பணம் மோசடி
- ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.
- இதனை நம்பி அவர் ரூ.27.64 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிவக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் பாஸ்கரன். இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பி அவர் ரூ.27.64 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.