உள்ளூர் செய்திகள்
கடன் பிரச்சனையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
- இவருக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்து வந்தது.
- மனமுடைந்து காணப்பட்ட தனபால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது38). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கடன் பிரச்சனை அதி கமாக இருந்து வந்தது.
இதனால் சம்பவத்தன்று மனமுடைந்து காணப்பட்ட தனபால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.