எழும்பள்ளம் ஏரியை தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
மன்னவனூரில் எழும்பள்ளம் ஏரியை தூர்வாரும் பணி தொடக்கம்
- எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணியை தொடங்குவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ளது எழும்பள்ளம் ஏரி. இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியை சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ஏரியை தூர் வாரவும், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் முழு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள செந்தில்குமார் எம்.எல்.ஏ., கொடைக்கானல் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்வேதா ராணி கணேசன், துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ்பாண்டி, மன்னவனூர் ஊராட்சித் தலைவர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள், ஊர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணியை தொடங்குவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் முத்துமாரி, மன்னவனூர் ஊராட்சித் தலைவர் முருகன், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ் பாண்டி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.