உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை சேதப்படுத்திய யானை

Published On 2022-06-23 10:23 GMT   |   Update On 2022-06-23 10:23 GMT
  • கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம்
  • பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி :

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

இந்தநிலையில் கூடலூர் பாடந்துரை உளிமாஞ்சோலை பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அங்குள்ள ரவிச்சந்திரன் என்பவர் வீட்டை தாக்கி சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றது. சேதம் அடைந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கி ரவிச்சந்திரன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு எக்ஸ்ரே பிரிவு செயல்படாததால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கோத்தகிரி-மேட்டுப்பா ளையம் பிரதான சாலையில் குஞ்சப்பனை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு காபித்தோட்டம், தேயிலை தோட்டம் அதிகம் உள்ளது. தற்போது பலாப்பழ சீசன் நடந்து வருவதால் அந்த பகுதிக்கு காட்டு யானைகள் உணவு தேடி வருகின்றன. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News