உள்ளூர் செய்திகள்

பிரவீன்

சாலை விபத்தில் மின் ஊழியர் பலி

Published On 2023-08-23 10:06 GMT   |   Update On 2023-08-23 10:06 GMT
  • பள்ளி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
  • விபத்தில் மின்சார ஊழியர் பிரவீன் பலியானார்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி தர்மாம்பாள் நகரில் வசித்து வந்தவர் பிரவீன் (23) திருமணம் ஆகாதவர்.

இவர் கள்ளப்பெரம்பூர் தமிழ் நாடு மின் பகிர்மான கழகத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் கள்ளப்பெரம்பூர்-பூதலூர் சாலையில் வந்த போது சித்திரகுடி அருகே எதிரில் வந்த பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் செயல் படும் தனியார் மெட்ரிக் பள்ளி வேன் பள்ளி மாணவர்களை இறக்கி விடுத்த வேனில் மோதினார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரவீன்ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும்வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து பள்ளி வேன் டிரைவர் ஆதிராஜன்(34) பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

பூதலூர் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்து போன பிரவுனின் தந்தை திருக்காட்டுப்பள்ளி மின் வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

வாரிசுக்கு பணி அடிப்படையில் பிரவீன் மின்வாரியத்தில் பணி யாற்றினார்.இவருக்கு தாயார் ரூபா மற்றும் ஒரு சகோதரி உள்ளார்.

Tags:    

Similar News