வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி சாவு
- எருமை ஒன்று திடீரென எதிரே வந்ததை அறிந்த ஓட்டுநர் காட்டெருமை மீது மோதாமல் இருக்க வாகனத்தை திடீரென திருப்பியதில் பள்ளத்தில் கவிழ்ந்தது.
- வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து பயணம் செய்த பெருமாயி தலையில் பலத்த காயமடைந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகாவிற்கு உட்பட்ட சித்தேரி நொச்சிக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி பெருமாயி (64).
இவர் கடந்த 21-ம் தேதியன்று நொச்சிகுட்டை கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரான பெருமாள் என்பவருக்கு சொந்தமான வாகனத்தில் சுத்தியல் சந்தைக்கு சமையல் பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்தார்.
சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது சித்தேரியில் இருந்து நொச்சிக்கோட்டை செல்லும் சாலையில் காட்டு எருமை ஒன்று திடீரென எதிரே வந்ததை அறிந்த ஓட்டுநர் காட்டெருமை மீது மோதாமல் இருக்க வாகனத்தை திடீரென திருப்பியதில் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து பயணம் செய்த பெருமாயி தலையில் பலத்த காயமடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சித்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.