உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2023-08-18 14:58 IST   |   Update On 2023-08-18 14:58:00 IST
  • கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மதுக் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.
  • மனமுடைந்த பசப்பா நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எப்பிரி கிராமத்தைச் சேர்ந்தவர் பசப்பா (வயது61). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மதுக் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.

இதுகுறித்து அவரது மனைவி சாரதா (55), தனது கணவர் பசப்பாவிடம் தட்டி கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த பசப்பா நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினரகள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News