திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்
- திருவதிகையில் அமைந்துள்ளது சரநாராயண பெருமாள் கோவில்.
- இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அமைந்து ள்ளது சரநாராயண பெரு மாள் கோவில். இது திருமண வரம் அருளும் வைணவ தலமாக திகழ்கி றது. இந்த கோவில் இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடலூர், விழுப்பு ரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி கும்பிட்டு செல்வார்கள். இங்கு கடந்த 18-ந் தேதி முதல் புரட்டாசி மகோற்ச வம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் திருமலை திருப்பதி மலையப்பனாக நெய் தீப ஒளியில் அருள்பாலித்து வருகிறார்.
இங்கு புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் திருமலையில் நடைபெறும் அனைத்து சேவைகளும் நடக்கிறது. நேற்று ஏகதின பிரம்மோற்சவம் நடைபெ ற்றது. காலை 6 மணி அளவில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் ஆகியவையும், 7 மணிக்கு பிரம்மோற்சவ கொடியே ற்றமும் நடந்தது. தொடர்ந்து 10 வாகனங்களில் சர நாரா யண பெருமாள் எழுந்தருளி ஏகதின பிரம்மோற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவி ந்தா" என்ற பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதனை தொட ர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.