உள்ளூர் செய்திகள்

அலமேலு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை

Published On 2023-08-14 13:11 IST   |   Update On 2023-08-14 13:11:00 IST
  • என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு 10 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

பொன்னேரி:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் அத்திப் பட்டு ஜி. ரவியின் தாயார் அலமேலு அம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் "என்னால் முடியும் என்ற தன்னம்பி க்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சி "நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா டி. ஜே. கோவிந்தராஜன் எம். எல்.ஏ. தலைமையில் நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்க தொகை, நலிந்த மாணவ ர்களுக்கு உதவி தொகை, மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், ஏழைகளுக்கு சலவை பெட்டி, தொழில், வியாபாரம் செய்ய உதவித் தொகை ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் துரை சந்திரசேகர் எம். எல். ஏ. , சமூக பொருளாதார முன்னேற்ற அறக்கட்டளை நிறுவன தலைவர் தர்மலிங்கம், கௌதம் சிவராமன், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், பேரூர் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், ஒருங்கிணைப்பாளர் சௌரிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News