உள்ளூர் செய்திகள்

பாதை பலப்படுத்தும் பணியால் மதுரை- செங்கோட்டை ரெயில் இன்று முதல் ரத்து

Published On 2022-10-16 09:24 GMT   |   Update On 2022-10-16 09:24 GMT
  • ராஜபாளையம் - சங்கரன்கோவில் பிரிவில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.
  • இதனால் மதுரை-செங்கோட்டை ரெயில்கள் வருகிற 31-ந்தேதி வரை ரத்தாகிறது.

நெல்லை:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ெரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.

இதுதொடர்பாக ஏற்கனவே தென்னக ரெயில்வே மதுரை கோட்டம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை முதல் பணிகள் தொடங்கின.

இதன் காரணமாக மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) ஆகிய முன்பதிவு இல்லாத 2 சிறப்பு ெரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டன.

இந்த ரெயில்கள் வருகிற 31-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News