உள்ளூர் செய்திகள்

கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

Published On 2022-09-21 15:18 IST   |   Update On 2022-09-21 15:18:00 IST
  • கடந்த சில மாதங்களாக சரியான வியாபாரம் இல்லாமல் சுசிலா பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.
  • சுசிலா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

ஓசூர் அருகேயுள்ள நல்லூர் பொத்த எலத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சுசிலா (வயது 50). இவர் அப்பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வந்தார்.

கடந்த சில மாதங்களாக சரியான வியாபாரம் இல்லாமல் சுசிலா பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.

இந்த நெருக்கடியாலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தாலும் சுசிலா மனமுடைந்து இருந்து வந்தார்.

இந்நிலையில் சுசிலா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் தந்த தகவலின்பேரில் ஓசூர் போலீசார் விரைந்து வந்து சுசிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்.

அவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News