உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் ஏரியில் குளித்த தொழிலாளி சாவு

Published On 2023-03-15 15:39 IST   |   Update On 2023-03-15 15:39:00 IST
  • மது அருந்திய நிலையில் சாலனேரி ஏரியில் குளித்து கொண்டிருந்தார்.
  • தண்ணீரில் மூழ்கி விஜயன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள உப்பாரப்பட்டி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது45). இவர் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று மது அருந்திய நிலையில் சாலனேரி ஏரியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் மூழ்கி விஜயன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News