உள்ளூர் செய்திகள்

முகாமில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் பேசினார்.

போதை பொருள் விழிப்புணர்வு முகாம்

Published On 2023-03-31 09:49 GMT   |   Update On 2023-03-31 09:49 GMT
  • கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார்.

சுவாமிமலை:

சுவாமிமலை அருகே அசூர் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு
போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரி டீன் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார்.

கல்லூரி முதல்வர் உஷா சேகர் முன்னிலை வகித்தார்.

முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

முகாமில் சிறப்பு விருந்தினராக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் கலந்து கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசினார்.

இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News