உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர் பேசினார்.

திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்

Published On 2022-06-27 09:18 GMT   |   Update On 2022-06-27 09:18 GMT
  • தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
  • தி.மு.க அரசின் சாதனைகளையும், கட்சி வளர்ந்து வந்த விதத்தையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. நிவேதா முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர செயலாளர் சுப்ராயன் மற்றும் சீர்காழி, கொள்ளிடங்களை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிக்குமார், செல்.சேது ரவிக் குமார், மலர் விழி முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன், திராவிட இயக்க சொற்பொழிவாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களிடையே தி.மு.க அரசின் சாதனைகளையும், திமுக கட்சி வளர்ந்து வந்த விதத்தையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெ.கே. செந்தில் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக் கூறினார்.

Tags:    

Similar News