உள்ளூர் செய்திகள்

சீர்காழிக்கு வந்த டாக்டர் ராமதாசுக்கு வரவேற்பு அளித்தனர்.

தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணமாக டாக்டர் ராமதாஸ் சீர்காழி வருகை

Published On 2023-02-25 10:01 GMT   |   Update On 2023-02-25 10:01 GMT
  • சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம், குஸ்தி, சுருள் வாள் உள்ளிட்ட சிலப்பக்கலைகளை சுற்றி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
  • மூவரின் சிலைகளு–க்கு செய்யப்ப ட்டிருந்த சிறப்பு அலங்கா ரத்தினை பார்வையிட்டு வணங்கினார்.

சீர்காழி:

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை கடந்த 23-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி 28-ம் தேதி மதுரையில் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 4-வது நாளான வெள்ளிக்கிழமை டாக்டர் ராமதாஸ்க்கு மாவட்ட ஆரம்ப எல்லையான கொள்ளிடத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களால் சிறப்பு வரவேற்பு
அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்திற்கு வருகை புரிந்து டாக்டர்.ராமதாஸ் வாகனத்திலிருந்தவாறே, முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை உள்ளிட்டமூவரின் சிலைகளுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரத்தினை பார்வையிட்டு வணங்கினார்.

மூவர் மணிமண்டபம் எதிரே கூடியிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் லண்டன்.ரெ.அன்பழகன், சின்னையன், நகர்மன்ற உறுப்பினர் வேல்முருகன், ஜி.வி.முருகவேல், பாலதண்டாயுதம், தேனூர்.ரவி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். முன்னதாக சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம், குஸ்தி, சுருள் வாள் உள்ளிட்ட சிலப்பக்கலைகளை சுற்றி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News