உள்ளூர் செய்திகள்

அய்யாதுரைபாண்டியன் நன்கொடை வழங்கிய போது எடுத்த படம்.


கடையநல்லூர் அருகே கோவிலில் கோபுரம் அமைக்க நன்கொடை-அய்யாதுரைபாண்டியன் வழங்கினார்

Published On 2022-11-28 09:29 GMT   |   Update On 2022-11-28 09:29 GMT
  • கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து தரும்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியோர்கள், இளைஞர்கள் எஸ்.அய்யாத்துரைப் பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.
  • அப்போது ஊத்துமலை இளைய ஜமீன் குமரேச ராஜா, அய்யாத்துரைப் பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, வக்கீல் வைரமுத்து, பேரவை செயற்குழு உறுப்பினர் பூலோக ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தென்காசி:

கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளி யம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து தரும்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியோர்கள், இளை ஞர்கள் அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.அய்யாத்துரைப் பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று அருணாசலபுரத்தை சேர்ந்த மூக்கையா, மகேஷ், கணேசன், மாடசாமி, ஆறுமுகசாமி, வேல்முருகன், மகேஷ், சாமி மாரிமுத்து, வேல் ராஜ், முத்துக்குமார், சாமித்துரை, கண்ணன்,அரவிந்த், ஆகியோர்கள் முன்னிலையில் அந்த சமுதாய நாட்டாண்மை மாதவனிடம் கோபுரம் அமைப்பதற்கான நன்கொடையினை எஸ்.அய்யாதுரை பாண்டியன் வழங்கினார். அப்போது ஊத்துமலை இளைய ஜமீன் குமரேச ராஜா, அய்யாத்துரைப் பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, வக்கீல் வைரமுத்து, பேரவை செயற்குழு உறுப்பினர் பூலோக ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News