உள்ளூர் செய்திகள்
குடிபோதையில் மயங்கி விழுந்த டாக்டர் பலி
- நண்பர் ஒருவரின் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
- சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
கோவை
கோவை சாப்பாபா காலனி அருகே உள்ள அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் திலக் விஜயகுமார் (வயது 48). திருமணமாகவில்லை. டாக்டரான இவர் ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் உள்ள நண்பர் ஒருவரின் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மது போதையில் இருந்த திலக் விஜயகுமார் மயங்கி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திலக் விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.