உள்ளூர் செய்திகள்

அண்ணாவின் 54 -வது நினைவு தினத்தை ஒட்டி தருமபுரியில் தி.மு.க. வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை

Published On 2023-02-03 09:36 GMT   |   Update On 2023-02-03 09:36 GMT
  • தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி, பிப்.3-

அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் தி.மு.க.வினர் ராஜகோபால் கவுண்டர் பூங்காவிலிருந்து அமைதி பேரணி தொடங்கி பேருந்து நிலையம், ஆறுமுக ஆச்சாரி தெரு வழியாக தருமபுரி நான்கு ரோடு சந்திப்பிலுள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான எம்.ஜி.சேகர், மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர்மன்ற தலைவர் லட்சுமி மாது, அவைதலைவர் செல்வராஜ் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News