உள்ளூர் செய்திகள்

பலியான மோகனசுந்தரம்.

தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் பலி

Published On 2023-01-22 14:46 IST   |   Update On 2023-01-22 14:46:00 IST
  • தி.மு.க.வில் பேரூர் கழக மாணவரணி பொறுப்பில் உள்ளார்.
  • அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டார் என கூறினார்.

காவேரிப்பட்டினம்,

காவேரிப்பட்டினம் தேசிய செட்டி தெரு சேர்ந்தவர் சின்ராஜ். இவர் நகை கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி தி.மு.க.வில் காவேரிப்பட்டினம் 14-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவருக்கு மோகனசுந்தரம்( 25) என்ற மகன் உள்ளார். இவர் தி.மு.க.வில் பேரூர் கழக மாணவரணி பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு காவேரிப்பட்டினம் ஆற்றோரம் உள்ள சிவன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வரும்போது ரோட்டில் நிறுத்திருந்த லோடு ஆட்டோவின் பின்பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியதால் கீழே விழுந்து தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் மோகனசுந்தரத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டார் என கூறினார். எனவே பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது .

இது குறித்து காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. 

Tags:    

Similar News