உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.

செம்பட்டியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-08-11 05:20 GMT   |   Update On 2023-08-11 05:20 GMT
  • செம்பட்டியில் ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
  • அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார்.

செம்பட்டி:

செம்பட்டியில் ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசிய தாவது:-

மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிரு க்கிறது. தி.மு.க. தொண்டன், மிசா பொடா சட்டத்தைப் பார்த்து அஞ்சியது கிடை யாது. வரும் பாராளுமன்றத் தேர்தலை துணிவோடு எதிர் நின்று சந்திக்க வேண்டும். நான் தொண்ட னுக்காக வாழ்கிறேன். எனக்கு உறவினர்கள், எல்லாம் இந்த இயக்கமும் தொண்டனும்தான். நான், இந்த இயக்கத்தின் தொண்டனை பற்றி சிந்திக்காத நாள் கிடையாது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தொண்டர்கள், இளைஞர்கள் துடிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். வெற்றி ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும். தி.மு.க. கோட்டையாக திண்டுக்கல் திகழ வேண்டும் என பேசினார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News